search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய பட்ஜெட்"

    • அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடக்கிறது.
    • 2024- 25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    நடப்பு 2024- 25-ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது.

    இதற்காக பிரதமர் மோடி மற்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த சில வாரங்களாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வந்தனர்.

    அதன்படி 2024- 25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.

    இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    பிரதமர் மோடியின் 3-வது ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இதுவாகும்.
    • இந்த பட்ஜெட் மீது மக்களிடம் பல்வேறு எதிர்பார்பார்ப்புகள் காணப்படுகிறது.

    புதுடெல்லி:

    நடப்பு 2024, 25-ம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    தற்போது தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது.

    இதற்காக பிரதமர் மோடி மற்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த சில வாரங்களாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வந்தனர்.

    அதன்படி 2024, 25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.

    இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று நடக்கிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இதுவாகும்.

    பிரதமர் மோடியின் 3-வது ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

    குறிப்பாக, வளர்ந்த இந்தியா என்ற இலக்கில் செயல்பட்டு வரும் மத்திய அரசு, அதற்கான திட்டங்களை பட்ஜெட்டில் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதை உறுதி செய்வதுபோல பிரதமர் மோடியும், இதை அமிர்த காலத்தின் முக்கியமான பட்ஜெட் என குறிப்பிட்டு உள்ளார்.

    அதேநேரம் இந்த பட்ஜெட் மீது மக்களிடமும் பல்வேறு எதிர்பார்பார்ப்புகள் காணப்படுகிறது. குறிப்பாக, வருமான வரிச்சுமையை குறைக்க வேண்டும் என்பது நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    மேலும் விலைவாசியை கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்க அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    இதைப்போல வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி விடுவித்தல், ஒப்புதல் வழங்குதல், நிதி ஒதுக்குதல் போன்ற பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு போன்ற பல்வேறு மாநில அரசுகளும் எதிர்பார்த்து இருக்கின்றன.

    இந்த எதிர்பார்ப்புகளை மத்திய பட்ஜெட் நிறைவேற்றுமா? என்பது இன்று தெரிந்து விடும்.

    • நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
    • நாட்டின் நலனுக்காக அடுத்து வரும் 5 ஆண்டுகளும் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வாருங்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதையொட்டி பிரதமர் மோடி பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்க்கிறது.

    எனவே கூட்டத்தொடர் முழுவதும் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டியது அவசியம். கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்.

    2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடையும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மக்களின் அனைத்து தேவைகளையும் கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

    நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். வளர்ச்சிக்கான பாதையில் நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

    கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் 8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. உலகில் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளை விட இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

    எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு அரசியலை கைவிட்டு நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்ற முன் வர வேண்டும்.

    கசப்பு அரசியலுக்கான நேரம் முடிந்து விட்டது. அரசியலை தேர்தல் நேரத்தில் பேசிக் கொள்ளலாம். பாராளுமன்றத்தின் பயனுள்ள நேரத்தை சிலர் வீணடிக்கிறார்கள். நம்மிடம் நாட்டு மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள்.

    நாட்டின் நலனுக்காக அடுத்து வரும் 5 ஆண்டுகளும் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வாருங்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.
    • பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கிறது

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக மத்திய பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமர்பித்தார்.

    பட்ஜெட்டுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை இந்திய பொருளாதாரத்தின் நிலை குறித்த விரிவான தகவல்களை வழங்குகிறது. அடுத்த நிதியாண்டிற்கான அரசி்ன் கொள்கை முன்னுரிமைகளையும் பிரதிபலிக்கிறது.

    பொருளாதார ஆய்வறிக்கையில் இடம் பெற்று உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    இந்தியாவின் பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளர்ச்சி காணும். நாட்டில் வேலை வாய்ப்புகள் பெருகி வருகிறது.


    தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படுகின்றன. நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.

    மோசமான காலநிலையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. நாட்டின் பணவீக்கம் 4.5 சதவீதமாக குறைய வாய்ப்பு உள்ளது.

    கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. 2020 நிதி ஆண்டை விட 2024-ம் ஆண்டில் உண்மையான ஜி.டி.பி. 20 சதவீதம் உயர்ந்துள்ளது. 2025-ம் நிதி ஆண்டில் வலுவான வளர்ச்சி இருக்கும்.

    உலகளாவிய பிரச்சனைகள், வினியோக சங்கிலியில் குளறுபடி, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால் பணவீக்கம் திறமையாக கையாளப்பட்டது. இதனால் 2023-ம் நிதி ஆண்டில் 6.7 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் 2024-ம் ஆண்டில் 5.4 சதவீதமாக குறைந்துள்ளது.

    நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு நீண்ட காலம் தெளிவான முன்னோக்கி செல்லும் திட்டம் தேவை. பணவீக்கம் 2025-ம் ஆண்டு 4.5 சதவீதம் ஆகவும், 2026-ம் ஆண்டு 4.1 சதவீதமாகவும் குறையும் என்று ஆர்.பி.ஐ. கணித்து உள்ளது. அதேபோல் 2024-ல் 4.6 சதவீதமாகவும் 2025-ல் 4.2 சதவீதமாகவும் இந்தியாவில் பணவீக்கம் இருக்கும் என்று ஐ.எம்.எப். கணித்து இருக்கிறது.

    பெரும்பாலான மாநிலங்களில் விலைவாசி குறைந்து வருகிறது.

    கடந்த 5 ஆண்டுகளில் வேளாண் துறையின் நிலையான வளர்ச்சி 4.18 சதவீதமாக இருக்கிறது. 2023-24-ல் வேளாண் துறை தற்காலிக வளர்ச்சி 1.4 சதவீதமாக உள்ளது.

    பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கிறது. இதில் தொழிற்துறையே முக்கிய பங்கு வகிக்கிறது. 9.5 சதவீத தொழிற்துறை வளர்ச்சி இதற்கு காரணமாகும்.

    வேலை வாய்ப்பு சந்தை கடந்த 6 ஆண்டுகளாக மேம்பட்டு வருகிறது.

    இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பாராளுமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
    • நீட் தேர்வு முறைகேடு தொடர்பான திமுக, காங்கிரஸ் எம்.பி.க்களின் கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

    பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமூகமாக நடத்த அனைத்து உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    தொடர்ந்து பாராளுமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விவாதம் நடைபெற்றது.

    நீட் தேர்வு முறைகேடு தொடர்பான திமுக, காங்கிரஸ் எம்.பி.க்களின் கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில் 2023-2024 பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    நாளை அவர் நடப்பு 2024-2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பாராளுமன்ற தேர்தல் வர இருந்ததால், கடந்த பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்தார்.

    முழுமையான பட்ஜெட்டை நாளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது, அவர் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் ஆகும்.

    • 5 கோடி மாணவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக நீட் தேர்வை எழுதி உள்ளனர்.
    • 4700 தேர்வு மையங்களில் பாட்னாவின் ஒரு தேர்வு மையத்தில் மட்டுமே வினாத்தாள் கசிந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பாராளுமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பினர்.

    * நீட் முறைகேட்டால் 24 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    * நீட் முறைகேட்டுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்து பேசினார். அவர் கூறுகையில்,

    * நீட் தேர்வில் 7 ஆண்டுகளாக வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை.

    * 5 கோடி மாணவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக நீட் தேர்வை எழுதி உள்ளனர்.

    * 7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்ததற்காக எந்த ஆதாரமும் இல்லை.

    * 4700 தேர்வு மையங்களில் பாட்னாவின் ஒரு தேர்வு மையத்தில் மட்டுமே வினாத்தாள் கசிந்துள்ளது.

    * நீட் முறைகேடு தொடர்பாக தொடர்ந்து முறையான விசாரணை நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.

    • மக்களுக்கு வழங்கி உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம்.
    • உலக நாடுகளை ஒப்பிடும்போத இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

    புதுடெல்லி:

    பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பாராளுமன்றம் சிறப்பாக நடைபெற அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    * பாராளுமன்றத்தின் கவுரவத்தை காப்பாற்றும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும்.

    * பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என நம்புகிறேன்.

    * பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    * பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

    * மக்களுக்கு வழங்கி உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம்.

    * எனது அரசியல் பயணத்தில் இன்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்.

    * 2047-ல் வளர்ந்த பாரதம் என்ற நோக்கத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    * நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கான வழிகாட்டி.

    * வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான எங்களது உழைப்பு தொடரும்.

    * வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதே எங்கள் கனவு.

    * உலக நாடுகளை ஒப்பிடும்போத இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

    * நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் "அமுத காலத்தில் தாக்கல் செய்யப்படும் உன்னத பட்ஜெட்".

    * 3-வது முறையாக நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

    * பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் பொருளாதாரத்தை விட இந்திய பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது.

    * கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 8 சதவீதம் உயர்ந்துள்ளது என்று கூறினார்.

    • கடந்த மாதம் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நடந்தது.
    • பட்ஜெட் கூட்டத்தொடர், ஆகஸ்டு 12-ந் தேதி வரை நடக்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 7 கட்டங்களாக நடந்தது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதி நடந்தது.

    வாக்கு எண்ணிக்கை முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்தது. கடந்த ஜூன் 9-ந் தேதி, 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். 71 மத்திய மந்திரிகளும் பதவியேற்றனர்.

    கடந்த மாதம் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நடந்தது. புதிய எம்.பி.க்கள் 2 நாட்களாக பதவியேற்றுக்கொண்டனர். இரு அவைகளும் அடங்கிய கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

    அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார்.

    இதைத்தொடர்ந்து பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்கிறார்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) அவர் நடப்பு 2024-2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பாராளுமன்ற தேர்தல் வர இருந்ததால், கடந்த பிப்ரவரி 1-ந் தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்தார்.

    முழுமையான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். இது, அவர் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் ஆகும்.

    பட்ஜெட் கூட்டத்தொடர், ஆகஸ்டு 12-ந் தேதி வரை நடக்கிறது. அதாவது, 19 அமர்வுகள் நடக்கிறது. மத்திய அரசு 6 மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. 90 ஆண்டுகள் பழமையான விமான சட்டத்துக்கு மாற்றான மசோதாவும் அவற்றில் அடங்கும். ஜனாதிபதி ஆட்சி நடக்கும் காஷ்மீருக்கான பட்ஜெட்டுக்கு பாராளுமன்ற ஒப்புதலையும் மத்திய அரசு கோர உள்ளது.

    நீட் தேர்வு முறைகேடுகள், ரெயில் விபத்துகள், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் அளிக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரெயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    சென்னை :

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 22-ந் தேதி தொடங்கும் எனவும், ஜூலை 23-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய அரசு கடந்த 6-ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது.

    நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடப்பு நிதியாண்டுக்கான (2024-2025) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில்,

    * மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்பட வேண்டும்.

    * தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    * பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    * கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    * தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரெயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    * கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்.






    • பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
    • குறிப்பாக வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா என மிகுந்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருந்ததால், கடந்த பிப்ரவரி 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்பட்டது.

    தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. 7 கட்டங்களாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைத்தது.

    அதை தொடர்ந்து கடந்த மாதம் புதிய மக்களவையின் முதலாவது கூட்டத்தொடர் நடந்தது. புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அதன் மீது நடந்த விவாதத்துக்கு பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார். அதன் பின்னர் பாராளுமன்ற கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 22-ந் தேதி தொடங்கும் எனவும், ஜூலை 23-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய அரசு கடந்த 6-ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    அதன்படி நாளை (திங்கட்கிழமை) பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிறது.

    நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடப்பு நிதியாண்டுக்கான (2024-2025) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பிரதமர் மோடியின் 3-வது ஆட்சிக்காலத்தின் முதலாவது பட்ஜெட் இதுவாகும்.

    பட்ஜெட்டில் வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்றும், பெரிய அளவிலான சமூக, பொருளாதார முடிவுகள் இடம் பெறும் என்றும் ஜனாதிபதி உரையில் கூறப்பட்டு இருந்தது.

    எனவே, பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. குறிப்பாக வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா என மிகுந்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

    இதற்கிடையில் மழைக்கால கூட்டத் தொடரில் 6 புதிய மசோதாக்களை தாக்கல் செய்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    அதே வேளையில் இந்த கூட்டத் தொடரில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம், ரெயில்வே பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

    ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம், வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும் என்றும், மாநிலத்தின் நலன் சார்ந்த பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் ஆக்ரோஷமாக எழுப்புவோம் என்றும் அறிவித்துள்ளது.

    அதேபோல் பொதுத்துறை வங்கிகளில் 51 சதவீதத்திற்கும் குறைவான பங்குகளை குறைக்கும் எந்தவொரு அரசாங்க நடவடிக்கையையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கும் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

    • மத்திய பட்ஜெட் தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.
    • இதில் நிதி மந்திரி நிர்மலா சீதாரமன் மற்றும் பொருளாதார நிபுணர்கள் பங்கேற்றனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வரும் 23-ம் தேதி 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வரும் 23-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்றபின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும்.

    இந்நிலையில், 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் அதிகாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • ஆந்திர மாநில திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை.
    • ஆந்திராவிக்ரு ரூ.60,000 - 70,000 கோடி அளவிற்கு முதலீடுகள் வரும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

    வரும் ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வரும் 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 3வது முறையாக மோடி பிரதமரான பிறகு செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும்.

    இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநில திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக சொல்லப்பட்டது.

    ஆந்திராவில் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் ஆலை அமைப்பது தொடர்பாக எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியுள்ளார்.

    அதன்படி, ஆந்திராவில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

    இந்த தொழிற்சாலையின் மூலம் ஆந்திராவிற்கு ரூ.60,000 - 70,000 கோடி அளவிற்கு முதலீடுகள் வரும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    ஸ்ரீகாகுளம், மச்சிலிப்பட்டினம் மற்றும் ராமயப்பட்டினம் ஆகிய 3 இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் இந்த ஆலை அமைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

    நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்து மோடி 3 ஆவது முறையாக பிரதமராகினார். ஆதலால் சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    ×