search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yuvraj Singh"

    • 2007-ம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்சர்கள் விளாசினார்.
    • அந்த போட்டியில் பிளின்டாப் -யுவாரஜ் சிங் இடையே மோதல் ஏற்பட்டது.

    2007-ம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்சர்கள் தொடர்ந்து அடித்தார். அந்தப் போட்டியின் போது யுவராஜ் சிங்கை இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாப் ஏதோ கூற மைதானத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. கோபமடைந்த யுவராஜ் சிங்கை டோனி சமாதானப்படுத்தினார். இதற்குப் பிறகு ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்து யுவராஜ் சிங் பதிலடி கொடுத்தார்.

    இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:-

    நான் ஆறாவது சிக்சரை அடித்ததும் டோனி என்னிடம் 'நீங்கள் எப்பொழுது எனக்கு பின்னால் பேட்டிங் செய்ய வருகிறீர்களோ, அப்பொழுதெல்லாம் உங்களுடைய ஸ்ட்ரைக் ரேட் இரண்டு மடங்காக இருக்கும்" என்று கூறினார்.

    பிளின்டாப் வீசிய 18-வது ஓவரில் பவுண்டரி அடித்து விட்டு கடைசி பந்தில் நான் ஒரு ரன் எடுத்தேன். அப்பொழுது பிளின்டாப் அது ஒரு அதிர்ஷ்டமான ஷாட் என கூறினார். அது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உன் கழுத்தை அறுப்பேன் என கூறினேன். கோபத்தில் இருந்த நான் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அடிக்க நினைத்தேன். அதன்படி 6 சிக்சர்களை அடித்தேன்.

    ஆனால் இந்த பிரச்சினையை எல்லாம் பிளின்டாப் மைதானத்திலேயே விட்டு விட்டார். போட்டி முடிந்ததும் அவர் எனக்கு இதையெல்லாம் கூறி கை குலுக்கினார். இதனால் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். நான் அவரை மிகவும் மதிக்கிறேன்" என்று கூறி இருக்கிறார்.

    • எம்.எஸ். டோனி தலைமையின் கீழ் யுவராஜ் சிங் நீண்ட காலமாக விளையாடினார்.
    • 2007 மற்றும் 2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல யுவராஜ் சிங் முக்கிய வீரராக திகழ்ந்தார்.

    இந்திய அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழந்தவர் யுவராஜ் சிங். இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார். இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் யுவராஜ் சிங்.

    இவரது தந்தை யோக்ராஜ் சிங். இவர் தொடர்ந்து எம்.எஸ். டோனியை விமர்சித்து வருகிறார். தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தவர் என வெளிப்படையாக குற்றம்சாட்டுகிறார்.

    இந்த நிலையில் எம்.எஸ். டோனியை ஒருபோதும் மன்னிக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் கூறியதாவது:-

    நான் எம்.எஸ். டோனியை மன்னிக்க மாட்டேன். கண்ணாடியில் அவரது முகத்தை அவர் பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால், அவர் எனது மகனுக்கு (யுவராஜ் சிங்) எதிரான என்ன செய்தார்? என்பதெல்லாம் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. இதை எனது வாழ்நாள் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்.

    நான் எனது வாழ்வில் இரணடு விசயங்களை செய்தது கிடையாது. முதல் விசயம், எனக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒருபோதும் மன்னித்தது கிடையாது. 2-வது, எனது குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் சரி அல்லது குழந்தைகளாக இருந்தாலும் சரி, ஒருபோதும் என வாழ்வில் கட்டிப்பிடிக்கமாட்டேன்.

    இவ்வாறு யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே ஐபிஎல் 2024 தொடரில் சிஎஸ்கே தோல்விக்கு டோனியின் மோசமான செயல்கள்தான் காரணம். யுவராஜ் சிங் மீது டோனி பொறாமைப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

    • டேரியஸ் விசர் 62 பந்துகளில் 132 ரன்கள் சேர்த்தார்.
    • அதில் 5 பவுண்டரி மற்றும் 14 சிக்சர்கள் அடங்கும்.

    சமோவா:

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் ஒரு ஓவரில் 36 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருந்தார். அதே சாதனையை தற்போது சமோவா நாட்டின் வீரர் டேரியஸ் விசர் படைத்துள்ளார். மேலும் ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    முதன் முதலாக 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் யுவராஜ் சிங் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை விளாசி சாதனை படைத்தார். அதன் பின்பு, கீரான் பொல்லார்டு (2021), நிக்கோலஸ் பூரன் (2024), திபேந்திரா சிங் ஏரி (2024) ரோகித் சர்மா / ரிங்கு சிங் இணைந்து (2024) என ஐந்து முறை இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. 

    அந்த வரிசையில், 2026 டி20 உலகக் கோப்பை தகுதி சுற்றில் வனுவாட்டு- சமோவா தீவுகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வனுவாட்டு வீரர் நாலின் நிபிகோ வீசிய 15-வது ஓவரில் டேரியஸ் விசர் ஆறு சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் மூன்று நோ பால்களும் வீசப்பட்டன. அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 39 ரன்கள் கிடைத்தது.

    உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சமோவா அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் குவித்தது. இதில் டேரியஸ் விசர் அதிரடியாக ஆடி 62 பந்துகளில் 132 ரன்கள் சேர்த்தார். அதில் 5 பவுண்டரி மற்றும் 14 சிக்சர்கள் அடங்கும்.

    இதனையடுத்து ஆடிய வனுவாட்டு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. சமோவா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


    • இந்த படத்துக்கு தற்காலிக தலைப்பாக சிக்ஸ் சிக்ஸர்கள் என இருக்கும் என்று கூறப்படுகிறது.
    • யுவராஜ் கதாபாத்திரத்திற்கு ரன்பீர் கபூர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. பூஷன் குமார் தயாரிக்கும் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் ரவி சமீபத்தில் யுவராஜை சந்தித்தனர். அதன் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

    புற்றுநோய் போன்ற கடுமையான நோயை எதிர்த்துப் போராடி தன்னை மீண்டும் களத்திற்குக் கொண்டு வந்த இந்த வீரரின் கதை நிச்சயம் பலருக்கும் ஊக்கம் தரக்கூடியதாக இருக்கும்.

    சிக்ஸ் சிக்ஸர்ஸ் என்ற பெயரில் உருவாக உள்ளது. படம் தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும். யுவராஜ் கதாபாத்திரத்திற்கு ரன்பீர் கபூர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இருப்பினும், யுவராஜ் ஒரு நேர்காணலில், தனது வாழ்க்கை வரலாறு படமாக இருந்தால், சித்தாந்த் சதுர்வேதி தனது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    யுவராஜின் பலத்தால், இந்தியா 2011-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

    • யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று ஹர்பஜன் தெளிவுபடுத்தினார்.
    • விசாரணைக்காக இந்த புகார் மாவட்ட இணைய பிரிவுக்கு அனுப்பப்படும்," என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    இன்ஸ்டாகிராம் வீடியோவில் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங் , சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், குர்கீரத் மான் ஆகியோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடியோ குறித்து ஹர்பஜன் தனது எக்ஸ் பதிவில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

    இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் (NCPEDP) செயல் இயக்குநர் அர்மான் அலி, அமர் காலனி போலீஸ் நிலைய அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

    இந்தப் புகாரில் கிரிக்கெட் வீரர்களை தவிர மெட்டா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சந்தியா தேவநாதன் ஆகியோரும் அடங்குவர்.

    புகாரின்படி, மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ஐ மீறி, இதுபோன்ற வீடியோவை பதிவேற்றம் செய்ய அனுமதித்ததாக கூறப்பட்டுள்ளது.

    "இது தொடர்பாக அமர் காலனி போலீஸ் நிலையத்திற்கு புகார் கிடைத்துள்ளது. விசாரணைக்காக இந்த புகார் மாவட்ட இணைய பிரிவுக்கு அனுப்பப்படும்," என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • இந்த அணியில் மூன்று இந்திய வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
    • யுவராஜ் சிங்கிடம் மோதிய இங்கிலாந்தின் ஆண்ட்ரூ பிளின்டாஃப் பெயர் கூட இந்த லெவனில் உள்ளது.

    மும்பை:

    சமீபத்தில் உலக லெஜன்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது. அப்போது உலக அளவில் சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்யுமாறு யுவராஜ் சிங்கிடம் கேட்கப்பட்டிருந்தது.

    அதற்கு மூன்று இந்திய வீரர்கள் மட்டுமே கொண்ட உலக அளவில் 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்தார். அந்த மூன்று இந்திய வீரர்களில் டோனியின் பெயர் இடம் பெறவில்லை.

    யுவராஜ் சிங் தேர்வு செய்த அணி உலக கிரிக்கெட் லெவன்- சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, ரிக்கி பாண்டிங், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், ஆண்ட்ரூ பிளின்டாஃப், வாசிம் அக்ரம், ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன் மற்றும் க்ளென் மெக்ராத்.

    2007 டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங்கிடம் மோதிய இங்கிலாந்தின் ஆண்ட்ரூ பிளின்டாஃப் பெயர் கூட இந்த லெவனில் உள்ளது. ஆனால் தனது சக வீரரான டோனியை அவர் இந்த அணியில் தேர்வு செய்யவில்லை.

    2007-ல் டோனி கேப்டன் பதவியை பெற்றதில் யுவராஜ் சிங்கிற்கு அதிருப்தி இருப்பது அனைவரும் அறிந்ததே. அதன் காரணமாகவே, அவர் டோனியின் பெயரை தவிர்த்து இருக்கலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

    • வெற்றியை கொண்டாடும் விதமாக யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை போன்ற நடந்து டான்ஸ் ஆடினர்.
    • நாங்கள் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை.

    முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கான லெஜெண்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணியில் முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் விளையாடினர்.

    வெற்றியை கொண்டாடும் விதமாக யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை போன்ற நடந்து டான்ஸ் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் மாற்றுதிறனாளிகளை கிண்டல் செய்வது போல் உள்ளதாக விமர்சனம் எழுந்தது. இதனால் 3 பேருக்கு டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 15 நாட்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிய பிறகு எங்கள் உடலின் வலியைப் பிரதிபலிக்கும் வகையில் மட்டுமே இந்த வீடியோவை பதிவிட்டோம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சமூக ஊடகங்களில் தௌபா தௌபாவின் வீடியோக்களைப் பற்றி புகார் செய்யும் எங்கள் மக்களுக்குத் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாங்கள் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை. ஒவ்வொரு தனிமனிதனையும் சமூகத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.

    15 நாட்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடியதால் எங்கள் உடல் வலியை பிரதிபலிக்கும் வகையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. நாங்கள் யாரையும் அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ முயற்சிக்கவில்லை.. இன்னும் மக்கள் நாங்கள் ஏதாவது தவறு செய்ததாக நினைத்தால்.. அனைவரும் மன்னிக்கவும்.. ப்ளீஸ் இதை இங்கே நிறுத்திவிட்டு முன்னேறுவோம். மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். அனைவரையும் விரும்புகிறேன்.

    இவ்வாறு ஹர்பஜன் தெரிவித்தார்.

    • லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது.
    • வெற்றி கொண்டாட்டத்தின்போது அவர்கள் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்திய அணியின் முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் லெஜெண்ட் கிரிக்கெட்டில் விளையாடினர். இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    வெற்றியை கொண்டாடும் விதமாக யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை போன்ற நடந்து டான்ஸ் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் மாற்றுதிறனாளிகளை கிண்டல் செய்வது போல் உள்ளதாக விமர்சனம் எழுந்தது.

    இந்த நிலையில் மூன்று பேருக்கு டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதனால் தகவல் தொழில்நுட்பம் சட்டத்தை (2000) மீறியதாக மெட்டா இந்தியாவின் மானேஜிங் டைரக்டரும், துணை தலைவருமான சந்தியா தேவநாதன் மீதும் புகர் அளிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி போலீசார் இந்த புகாரை சைபர் பிரிவிற்கு அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வெறும் மன்னிப்பு கேட்டால் மட்டுமு் போதாது. அவர்களுடைய நடவடிக்கைக்காக தண்டனை வழங்கப்பட வேண்டும் என புகார் அளித்தவர் தெரிவித்துள்ளார்.

    • அபிஷேக் சர்மா 46 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவுசெய்தார்.
    • இதன் மூலம் ஆட்டநாயகன் விருதை அபிஷேக் சர்மா தட்டி சென்றார்.

    இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று ஹராரேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 46 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவுசெய்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்களைக் குவித்தது.

    அதன்பின் விளையாடிய ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் இப்போட்டி முடிந்த கையோடு அபிஷேக் சர்மா, தனது ஆலோசகரும், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவனுமான யுவராஜ் சிங்குடன் வீடியோ கால் வாயிலாக உரையாடினார். அப்போது யுவாராஜ் சிங் அபிஷேக் சர்மாவிடம், "உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் அதற்கு தகுதியானவர். இது வெறும் ஆரம்பம் மட்டும் தான். இன்னும் பல வர உள்ளன" என்று பாராட்டியுள்ளார்.

    இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அந்தவகையில் அவர் தனது இரண்டாவது போட்டியிலேயே சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகக்குறைந்த இன்னிங்சில் சதமடித்த வீரர் எனும் சாதனை படைத்துள்ளார்.

    • இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 243 ரன்களை பாகிஸ்தான் குவித்தது.
    • உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை தொடரின் புள்ளிபட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது.

    உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை 2024 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 6 அணிகள் விளையாடுகின்றன.

    இந்த லெஜண்ட்ஸ் கோப்பை தொடரின் 8 ஆவது போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி பர்மிங்காம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கம்ரான் அக்மல் மற்றும் சர்ஜீல் கான் இந்திய அணியின் பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தனர். 30 பந்துகளில் 72 ரன்கள் குவித்து சர்ஜீல் கான் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய கம்ரான் அக்மல் 77 ரன்களும் சோயப் மக்சூத் 51 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை பாகிஸ்தான் அணி குவித்தது.

    244 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

    இந்திய அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 52 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணியில் வஹாப் ரியாஸ், சோயப் மாலிக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த சர்ஜீல் கான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது. விளையாடிய 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா 2-ம் இடத்திலும் இந்தியா 3-ம் இடத்திலும் உள்ளது.

    • பவுலர்களை ரோகித் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி ஆட்டத்தை மாற்றினார்.
    • மறுபுறம் இந்தியாவின் அந்த துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள பாகிஸ்தானின் பேட்டிங் திணறியது.

    டி20 உலகக் கோப்பையின் நேற்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் விளையாடிய இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்நிலையில் பும்ரா போன்ற பவுலர்களை சரியான நேரத்தில் அறிவுப்பூர்வமாக பயன்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா வெற்றியை தலைகீழாக மாற்றியதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை கொண்ட போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றுள்ளது. ரோகித் சர்மாவின் வியூகம் நிறைந்த மாஸ்டர் கிளாஸ் சிறப்பாக உள்ளது. பவுலர்களை அவர் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி ஆட்டத்தை மாற்றினார். மறுபுறம் இந்தியாவின் அந்த துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள பாகிஸ்தானின் பேட்டிங் திணறியது.

    இந்த வெற்றிக்கு இந்திய அணி மிகவும் தகுதியானது. ரிஷப் பண்ட் நன்றாக விளையாடினார். ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் நன்றாக பந்து வீசினர்.

    இவ்வாறு யுவராஜ் கூறினார்.

    • ரோகித் எப்போதும் வேடிக்கையாகவும், சக வீரர்களுடன் விளையாட்டாகவும் நடந்து கொள்வார்.
    • கிரிக்கெட்டில் எனது மிக நெருங்கிய நண்பர்களில் அவரும் ஒருவர்.

    இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் வருகிற 26-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதற்கான ரோகிசர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ரோகித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன் என இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மா இந்திய அணியில் இருப்பது மிகவும் முக்கியமானது. நமக்கு நல்ல கேப்டன் தேவை. அழுத்தமான சூழ்நிலைகளின் போது தெளிவான முடிவுகள் எடுக்கக்கூடிய கேப்டன் ரோகித் சர்மா.

    2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை ரோகித் சர்மா அழைத்து சென்றார். அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அவரைப் போன்ற ஒரு கேப்டன் தான் இந்திய அணிக்கு தேவை.

    ரோகித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன். உலகக் கோப்பை பதக்கத்தை அவர் அணிய வேண்டும். அதற்கு அவர் தகுதியானவர்.

    ரோகித் சர்மா வெற்றிகளை பெற்ற பின்னும் இன்னும் மாறவில்லை. அதுதான் ரோகித் சர்மாவின் அழகு. எப்போதும் வேடிக்கையாகவும், சக வீரர்களுடன் விளையாட்டாகவும் நடந்து கொள்வார். ஆடுகளத்தில் மிகச்சிறந்த தலைவராக இருப்பார். கிரிக்கெட்டில் எனது மிக நெருங்கிய நண்பர்களில் அவரும் ஒருவர்.

    இவ்வாறு யுவராஜ் கூறினார்.

    இந்திய அணிக்காக இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட வீரர் யுவராஜ் சிங். 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் போன்ற காரணங்களால் யுவராஜ் சிங்கிற்கு இந்த மரியாதைக்குரிய பதவி அளிக்கப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறி இருந்தது.

    ×