கிரிக்கெட் (Cricket)

மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா வெற்றிபெற 109 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

Published On 2024-07-19 14:59 GMT   |   Update On 2024-07-19 14:59 GMT
  • டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் 108 ரன்கள் எடுத்தது.
  • இந்தியாவின் தீப்தி சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.

தம்புல்லா:

9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையின் தம்புல்லாவில் இன்று தொடங்கியது.

இந்நிலையில், இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

இறுதியில், பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், ரேணுகா தாகூர் சிங், பூஜா வஸ்த்ராகர், ஷ்ரேயங்கா பாட்டீல் தலா 2 விக்கெட்டு வீழ்த்தினர்.

இதையடுத்து, 109 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News