கிரிக்கெட் (Cricket)

தொடர்ச்சியாக 4 டெஸ்டில் வெற்றி- டோனியின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா

Published On 2023-02-20 07:43 GMT   |   Update On 2023-02-20 07:43 GMT
  • டோனி, ரோகிசர்மா, பாபர் அசாம் ஆகிய 3 கேப்டன்கள் மட்டுமே முதல் 4 டெஸ்டில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

புதுடெல்லி:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று முத்திரை பதித்தது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்னும், இந்தியா முதல் இன்னிங்சில் 262 ரன்னும் எடுத்தன. ரவீந்திர ஜடேஜா, அஸ்வினின் அபாரமான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 113 ரன்னில் சுருண்டது. இருவரும் இணைந்து (ஜடேஜா 7 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட்) 10 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தனர்.

115 ரன் இலக்கை இந்திய அணி 4 விக்கெட் இழந்து எடுத்தது. இந்தியா 26.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 4 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி டெஸ்டில் 4-வது வெற்றியை பெற்றது. அவரது கேப்டன் பொறுப்பில் இந்தியா விளையாடிய முதல் 4 டெஸ்டிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. தோல்வியை தழுவவில்லை.

இதன் மூலம் அவர் டோனியின் சாதனையை சமன் செய்தார். டோனி தலைமையில் முதல் 4 டெஸ்டில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று இருந்தது. டோனி, ரோகிசர்மா, பாபர் அசாம் ஆகிய 3 கேப்டன்கள் மட்டுமே முதல் 4 டெஸ்டில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

Tags:    

Similar News