கிரிக்கெட்

டிஎன்பில்- சேலம் அணியை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் அசத்தல் வெற்றி

Published On 2023-06-22 18:26 GMT   |   Update On 2023-06-22 18:26 GMT
  • சேலம் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது.
  • இரண்டாவது முறையாக மழையால் போட்டி நிறுத்தப்பட்டதால் தற்போது ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்கவிருந்த நிலையில் மழையால் தாமதமானது. பின்னர், மழை நின்றபின் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது. சேலம் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது, திடீரென மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி தற்போது நிறுத்திவைக்கப்பட்டது.

அப்போது, முகமது கான் 10 ரன்களுடனும், அபிஷேக் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முதல் பாதியில் சேலம் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது.

இரண்டாவது முறையாக மழையால் போட்டி நிறுத்தப்பட்டதால் தற்போது ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

அதன்படி, 129 ரன்கள் இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியுள்ளது. ஆட்டத்தில், ஸ்ரீ நிரஞ்சன் மற்றும் அஜிதேஷ் குருசுவாமி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.

இதில், அருண் கார்த்திக் முதல் பந்துலேயே அவுட்டானார். இவரை தொடர்ந்து அஜித்தேஷ் களமிறங்கினார்.

ஸ்ரீ நிரஞ்சன் 14 ரன்களிலும், அஜித்தேஷ் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, ரித்திக் 18 ரன்களும், சோனு யாதவ் 8 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

இறுதியாக, சுகேந்திரன் மற்றும் சூர்ய பிரகாஷ் ஆகியோர் தலா 11 மற்றும் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், நெல்லை அணி 15.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி அபாரமாக வெற்றிப் பெற்றது.

நெல்லை அணி 15.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 5 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தி நெல்லை அணி அசத்தலாக வெற்றிப் பெற்றது.

Tags:    

Similar News