கிரிக்கெட்

டிஎன்பிஎல்: மழையால் போட்டி 16 ஓவர்களாக குறைப்பு- நெல்லை அணிக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயம்

Published On 2023-06-22 17:02 GMT   |   Update On 2023-06-22 17:02 GMT
  • லீக் ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்கவிருந்த நிலையில் மழையால் தாமதமானது.
  • சேலம் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்திருந்தது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்கவிருந்த நிலையில் மழையால் தாமதமானது.

பின்னர், மழை நின்றபின் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

சேலம் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, திடீரென மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி தற்போது நிறுத்திவைக்கப்பட்டது.

அப்போது, முகமது கான் 10 ரன்களுடனும், அபிஷேக் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முதல் பாதியில் சேலம் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது.

இரண்டாவது முறையாக மழையால் போட்டி நிறுத்தப்பட்டதால் தற்போது ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 129 ரன்கள் இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியுள்ளது.

ஆட்டத்தில், ஸ்ரீ நிரஞ்சன் மற்றும் அஜிதேஷ் குருசுவாமி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளனர்.

Tags:    

Similar News