உள்ளூர் செய்திகள் (District)

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள்

Published On 2023-05-06 09:37 GMT   |   Update On 2023-05-06 09:37 GMT
  • 3,250 ஹெக்டேர் பரப்பளவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ. 27.27 கோடி நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டு உள்ளது
  • 2023-24-ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடம் இருந்து வரவேற்கப்படுகிறது.

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் செயல்பட்டு வருகிறது.

இந்த நுண்ணீர் பாசன திட்டம் மூலம் 2023-24-ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடம் இருந்து வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்கப்பட உள்ளன.

சிறு, குறு விவசாயிகள் குறைந்தபட்சம் 0.40 ஹெக்டேர் முதல் அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருந்தால் பயன்பெறலாம். இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் கோவை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் 3,250 ஹெக்டேர் பரப்பளவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ. 27.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதன்படி பாதுகாப்பான மற்றும் செமி கிறிட் 5 டிக்கல் குறுவட்ட பகுதிகளுக்கு 250 ஹெக்டேர் இலக்கும், ஓவர் எக்ஸ்பிளோடெடு மற்றும் கிறிட்டிக்கல் குறுவட்ட பகுதிகளுக்கு 3000 ஹெக்டேரும் இலக்கு பெறப்பட்டு உள்ளது. ஆனைமலை 150 ஹெக்டேர், அன்னூர் 390 'ஹெக்டேர், காரமடை 450 ஹெக்டேர், கிணத்துக்கடவு 385 ஹெக்டேர், மதுக்கரை 270 ஹெக்டேர், பி.என்.பாளையம் 140 ஹெக்டேர், பொள்ளாச்சி வடக்கு 265 ஹெக்டேர். பொள்ளாச்சி தெற்கு 145 ஹெக்டேர், சர்க்கார்சாம குளம் 125 ஹெக்டேர், சுல்தான்பேட்டை 360 ஹெக்டேர், சூலூர் 165 ஹெக்டேர், தொண்டாமுத்தூர் 405 ஹெக்டேர் என வட்டாரங்களுக்கு இலக்கு அளிக்கப்பட்டு விவசாயிகளின் விண்ணப்பங்கள் tnhorticulture.tn.gov. in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தாங்களாகவே விண்ணப்பங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் இணையதளத்தில் பதிவு செய்ய தெரியாத விவசாயிகள் வட்டார தோட்டக்கலை அலுவலர்களின் உதவியுடன் பதிவு செய்யலாம். இத்திட்டத் தின் கீழ் பயன்பெற வட்டாட்சியரால் வழங்கப்பட்ட சான்று மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, நில வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கை, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல், விண்ணப்ப தாரரின் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News