உள்ளூர் செய்திகள்

சேலம் வழியாக வந்த கேரள ரெயிலில் 14 கிலோ புகையிலை பறிமுதல்

Published On 2022-10-01 08:12 GMT   |   Update On 2022-10-01 08:12 GMT
  • ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
  • தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்களில் 14 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சேலம்:

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ராமன், சங்கர், சக்திவேல் ஆகியோர் இன்று காலை ரெயிலில் சோதனை செய்தனர்.

அப்போது பொதுப்பெட்டியில் உள்ள பாத்ரூமில் ஒரு சொல்டர் பேக் கேட்பாரற்று கிடைந்தது. அந்த பேக்கை சோதனை செய்தபோது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்களில் 14 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலையை பறிமுதல் செய்து கடத்தி வந்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News