உள்ளூர் செய்திகள் (District)

இலவச பொது மருத்துவ முகாம்

Published On 2023-10-13 07:33 GMT   |   Update On 2023-10-13 07:33 GMT
  • மதுரை அருகே இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
  • இம்முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

மதுரை

கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி அரைஸ் விரிவாக்கத்துறை மற்றும் செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து மழைகாலங்களில் நோய் பரவுவதை தடுக்க இலவச பொது மருத்துவ முகாம் நத்தப்பட்டி, வடக்கம்பட்டி, புள்ளநேரி கிராமங்களில் நடைபெற்றது. வடக்கம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு கல்லூரி முதல்வர் அன்பரசு தலைமை வகித்தார். அரைஸ் விரி வாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் வரவேற்றார். கணிதவியல் துறைத் தலை வர் ராபர்ட் திலீபன், அரசு கள்ளர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாம்ராஜ் ஆகியோர் வாழ்த்தி வழங்கினர். கணிதவியல் துறை பேராசிரியர் சஜன் ஜோசப் நன்றி கூறினார்.

நத்தப்பட்டி முகாமில் கல்லூரி துணை முதல்வர் துரைசிங்கம், பொருளாதாரத்துறை தலைவர் ஜெய ராஜ், கோவிலாங்குளம் ஊராட்சி செயலர் ஜெயபால், பொருளாதாரத்துறை பேராசிரியர் நந்தக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

புள்ளநேரி கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கல்லூரி துணை முதல்வர் இன்னாசி ஜான், புள்ள நேரி ஊராட்சி மன்றத் தலைவர் மாயாண்டி, ஊரக வியல்துறைத் தலைவர் அம்புதாஸ் அரவிந்த் ஆகி யோர் பங்கேற்றனர். ஊரக வியல்துறை பேராசிரியர் அடைக்கலராஜ் நன்றி கூறினார்.

நத்தப்பட்டி முகாமில் செல்லம்பட்டி வட்டார மருத்துவர் பாண்டியராஜன் தலைமையிலும், வடக்கம்பட்டி, புள்ளநேரி கிராமங்களில் மருத்துவர்கள் சாந்தினி, பிரியா தலைமையிலான குழுவினர்கள் பொது மக்களுக்கு காய்ச்சல், சளி, சர்க்கரை, ரத்த அழுத்தம் குறித்து பொது மக்களை பரிசோதித்து ஆலோசனைகளை வழங்கினர். இம்முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Tags:    

Similar News