உள்ளூர் செய்திகள்

கூத்தாநல்லூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2023-04-05 10:52 GMT   |   Update On 2023-04-05 10:52 GMT
  • கூத்தாநல்லூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • பொதக்குடி, சித்தாம்பூர், அதங்குடி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் போலீசார் கூத்தாநல்லூர், கோரையாறு, பொதக்குடி, சித்தாம்பூர், வாழச்சேரி, லெட்சுமாங்குடி, அதங்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அதங்குடி பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் அதங்குடி, சறுக்கக்கரை தெருவைச் சேர்ந்த விஜய், தமிழரசன் என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விஜய், தமிழரசன் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News