சேலத்தில் மாயமான 2 மாணவர்கள் ஈரோட்டில் மீட்பு
- சேலம் கருப்பூரில் உள்ள தாய் அருவி வீட்டில் தங்க வைத்து பிரியா தனது 2 மகன்களையும் படிக்க வைத்து வருகிறார்.
- நேற்று முன்தினம் 2 பேரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால் இருவரும் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 35). லாரி டிரைவர். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு மோனீஸ்வரன் (10), பூவரசன் (8) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். சேலம் கருப்பூரில் உள்ள தாய் அருவி வீட்டில் தங்க வைத்து பிரியா தனது 2 மகன்களையும் படிக்க வைத்து வருகிறார். இருவரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் 2 பேரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால் இருவரும் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது அங்கு 2 பேரும் இல்லை. இதனால் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் 2 பேரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இருவரும் ஈரோடு மாவட்டம் பாப்பம்பாளையத்தில் உள்ள குமாரின் பெற்றோர் வீட்டுக்கு பஸ்சில் சென்றிருப்பது தெரிந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், இருவரையும் மீட்டனர்.