செய்திகள் (Tamil News)

சீர்காழியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2017-02-08 08:42 GMT   |   Update On 2017-02-08 08:43 GMT
சீர்காழியில் நாளை மின்நிறுத்தம் ஏற்படும் என்று வைத்தீஸ் வரன்கோவில் மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

சீர்காழி:

சீர்காழி அருகே வைத்தீஸ் வரன்கோவில் துணை மின்நிலையத்தில் நாளை (9-ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி அந்த துணை மின் நிலையத்தில் மின் வினியோகம் பெறும் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதபுரம், புங்கனூர், மேலசாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புன்கூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

இந்த தகவலை வைத்தீஸ்வரன்கோவில் மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Similar News