செய்திகள் (Tamil News)

தொட்டியத்தில் மார்க்சிஸ்டு கம்யூ. கட்சியினர் சாலை மறியல்: 17 பேர் கைது

Published On 2017-02-08 17:53 GMT   |   Update On 2017-02-08 17:54 GMT
தொட்டியத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 7 பெண்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொட்டியம்:

தென்மேற்கு பருவ மழை பொய்த்ததாலும், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பின் படி தண்ணீர் திறந்து விடுமாறு பல முறை தொடர்ந்து உத்தரவிட்டும் கர்நாடக அரசு அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதாலும் தமிழகத்தில் இதுவரை கண்டிராத பெரும் வறட்சியை கண்டுள்ளது, வறட்சியின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்,

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டத்தலைவர் சத்தியமூர்த்தி தலை மையில் தொட்டியம் வாணப்பட்டறை கார்னரில் திருச்சி-நாமக்கல் சாலையில் மறியல் நடைபெற்றது. இதனை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

சாலைமறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 17 பேரை தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி வண்ணன் கைது செய்தார்.

Similar News