செய்திகள்

தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

Published On 2018-05-09 17:12 GMT   |   Update On 2018-05-09 17:12 GMT
தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000த்தை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தனகோபால் (வயது 57). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை தனகோபாலிடம் காட்டி அவரிடமிருந்து ரூ.1000 -த்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து தனகோபால் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தனகோபாலிடம் பணத்தை பறித்து சென்றவர் இடையக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இளையராஜா (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று போலீசார் இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News