செய்திகள் (Tamil News)
மதுரை அருகே டிராக்டர் மோதி விபத்து: பெண் பலி
மதுரை அருகே டிராக்டர் மோதி விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை சர்வேயர் காலனி, சக்தி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி உமா சங்கரி (வயது 35). இவர் கணவருடன் மோட்டார் சைக்கிளில் இன்று காலை புறப்பட்டார்.
மூன்றுமாவடி அருகே சென்றபோது பின்னால் தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டர் வேகமாக வந்தது. எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியது.
இதில் உமா சங்கரி தூக்கி வீசப்பட்டார். மோதிய வேகத்தில் நிலை தடுமாறிய டிராக்டர் கீழே விழுந்த உமா சங்கரியின் தலையில் ஏறியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.