செய்திகள்

ஈரோட்டில் பஸ் மோதி தறிப்பட்டறை தொழிலாளி பலி

Published On 2018-05-15 11:45 GMT   |   Update On 2018-05-15 11:45 GMT
ஈரோட்டில் அரசு பஸ் மோதிய விபத்தில் தறிப்பட்டறை தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு, மாணிக்கம் பாளையம், ஹவுசிங் யுனிட் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ்(வயது44). தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி முத்துகுட்டி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று இரவு அந்தோணிராஜ் கடைக்கு சென்றார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத வகையில் அந்தோணிராஜ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்தோணிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்தோணிராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News