செய்திகள்
கும்பகோணம் அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி
கும்பகோணம் அருகே சாலை விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பகோணம்:
கும்பகோணம் கம்மாளத் தெருவை சேர்ந்தவர் வேம்பு மகன் ராஜா(வயது28). இவரது நண்பர் ஜான்பீட்டர்(26). இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் பட்டீஸ்வரம் சென்றனர். பின்னர் இருவரும் தாராசுரம் வழியாக கும்பகோணம் வந்து கொண்டிருந்தனர்.
சோழன்மாளிகை என்ற இடத்தில் வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
படுகாயமடைந்த ஜான்பீட்டரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.