செய்திகள்

பண்ருட்டி அருகே கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல்: ஒருவர் கைது

Published On 2018-05-23 11:52 GMT   |   Update On 2018-05-23 11:52 GMT
பண்ருட்டி அருகே முன்விரோத தகராறில் கணவன் மற்றும் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஓருவர் கைது செய்யப்பட்டார்.

பண்ருட்டி:

பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் காலனியை சேர்ந்தவர் கண்ணனன் (வயது 47). இவரது மனைவி அஞ்சலை. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அரசன் என்பவரது மனைவி நாவம்மாள் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இதற்கிடையில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அரசன் மற்றும் அவரது மனைவி நாவம்மாள் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து அஞ்சலை மற்றும் இவரது கணவர் கண்ணன் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

காயமடைந்த கண்ணன், அஞ்சலை ஆகியோர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்கள்.

இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா, அரசன் அவரது மனைவி நாவம்மாள் மற்றும் உறவினர்கள் பாக்கியராஜ், செண்பகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நாவம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

Similar News