மாமல்லபுரம் அருகே கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை
மாமல்லபுரம்:
நெய்வேலி நகரியத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் சத்தியரேகா (வயது 17). மாமல்லபுரத்தில் பையனூரில் உள்ள தனியார் தொழில் நுட்ப கல்லூரியில் பயோ மெடிக்கல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
அவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று விட்டு சத்தியரேகா விடுதிக்கு வந்தார். அப்போது அவர் சோகமாக காணப்பட்டார். இது பற்றி கேட்ட போது எதுவும் கூறவில்லை.
இந்த நிலையில் விடுதி வளாகத்தில் உள்ள கூரையில் சசிரேகா தனது துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து மற்ற மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சத்தியரேகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சத்தியரேகா தற்கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.