செய்திகள்
மாதா கோவில் விழாவில் பட்டாசு வெடித்து மாணவி உள்பட 7 பேர் கருகினர்
கும்மிடிப்பூண்டியை அடுத்த தோக்கம்பூரில் மாதா கோவில் விழாவில் பட்டாசு வெடித்து மாணவி உள்பட 7 பேர் உடல் கருகினர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த தோக்கம்பூரில் மாதா கோவில் உள்ளது. நேற்று ஆலயத்தில்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று இரவு மாதா சிலை ஊர்வலம் நடந்தது.
இதில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் போது லோடு ஆட்டோவில் வைத்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அந்த ஆட்டோவில் சிறுவர்கள் ஏராளமானோர் அமர்ந்து இருந்தனர். ஒரு பட்டாசு வெடித்து சிதறிய போது அதன் தீப்பொறி லோடு ஆட்டோவில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்தது. இதனால் பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின.
இதில் அருகே நின்ற சென்னை அண்ணாநகரை சேர்ந்த அக்காள்- தம்பியான காவியா (9), சஞ்செய் (8) மற்றும் போந்தவாக்கம் தர்ஷினி (10), தோக்கம்பூர் அர்ஜூன் (11), ஜோசப் (5), ஹரீஸ்பாபு (6), கல்லூரி மாணவி பர்வீனா (21) ஆகிய 7 பேர் உடல் கருகினர்.
உடனடியாக அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இவர்களில் தர்ஷினி, அர்ஜூன், ஹரீஸ் பாபு ஆகியோரது நிலைமை மோசமாக உள்ளது. #Tamilnews
கும்மிடிப்பூண்டியை அடுத்த தோக்கம்பூரில் மாதா கோவில் உள்ளது. நேற்று ஆலயத்தில்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று இரவு மாதா சிலை ஊர்வலம் நடந்தது.
இதில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் போது லோடு ஆட்டோவில் வைத்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அந்த ஆட்டோவில் சிறுவர்கள் ஏராளமானோர் அமர்ந்து இருந்தனர். ஒரு பட்டாசு வெடித்து சிதறிய போது அதன் தீப்பொறி லோடு ஆட்டோவில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்தது. இதனால் பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின.
இதில் அருகே நின்ற சென்னை அண்ணாநகரை சேர்ந்த அக்காள்- தம்பியான காவியா (9), சஞ்செய் (8) மற்றும் போந்தவாக்கம் தர்ஷினி (10), தோக்கம்பூர் அர்ஜூன் (11), ஜோசப் (5), ஹரீஸ்பாபு (6), கல்லூரி மாணவி பர்வீனா (21) ஆகிய 7 பேர் உடல் கருகினர்.
உடனடியாக அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இவர்களில் தர்ஷினி, அர்ஜூன், ஹரீஸ் பாபு ஆகியோரது நிலைமை மோசமாக உள்ளது. #Tamilnews