செய்திகள்
பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி பனியன் கம்பெனி தொழிலாளி பலி
பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி பனியன் கம்பெனி தொழிலாளி பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி கள்ளி மேடு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் மாரி (25). அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு இவர் தனது நண்பர் தினேசுடன் (24) மோட்டார் சைக்கிளில் கடை வீதிக்கு சென்றார். திருப்பூர்-பொங்கலூர் சாலையில் பெத்தாம் பாளையம்பகுதியில் சென்ற போது எதிரே மோட்டார் சைக்கிளில் கள்ளி மேடு பகுதியை சேர்ந்த சசிகுமார், ஜெகநாதன் ஆகியோர் வந்தனர்.
திடீரென இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் 4 பேரும் தவறி கீழே விழுந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த மாரி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அவரது நண்பர் தினேஷ் மற்றும் சசிகுமார், ஜெகநாதன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி கள்ளி மேடு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் மாரி (25). அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு இவர் தனது நண்பர் தினேசுடன் (24) மோட்டார் சைக்கிளில் கடை வீதிக்கு சென்றார். திருப்பூர்-பொங்கலூர் சாலையில் பெத்தாம் பாளையம்பகுதியில் சென்ற போது எதிரே மோட்டார் சைக்கிளில் கள்ளி மேடு பகுதியை சேர்ந்த சசிகுமார், ஜெகநாதன் ஆகியோர் வந்தனர்.
திடீரென இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் 4 பேரும் தவறி கீழே விழுந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த மாரி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அவரது நண்பர் தினேஷ் மற்றும் சசிகுமார், ஜெகநாதன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews