செய்திகள்

திருப்பூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 8-ம் வகுப்பு மாணவர் பலி

Published On 2018-06-06 10:16 GMT   |   Update On 2018-06-06 10:16 GMT
திருப்பூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தபோது வேன் மோதிய விபத்தில் 8-ம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர்:

திருப்பூர் அனுப்பர் பாளையம் குமரன்நகர் காலனியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் முரளிகிருஷ்ணன்(வயது 13). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவர் முரளிகிருஷ்ணனை அவரது அண்ணன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது வரும் வழியில் அம்மம்பாளையம் என்ற பகுதியில் எதிரே வந்த மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மாணவர் முரளிகிருஷ்ணன், அவரது அண்ணன் ஆகியோர் தவறி ரோட்டில் கீழே விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் மாணவர் முரளிகிருஷ்ணன் மீது மோதியது.

இதில் பலத்த படுகாயம் அடைந்த அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் முரளிகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News