செய்திகள்

ஒட்டன்சத்திரத்தில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கல்லூரி மாணவர் கைது

Published On 2018-06-07 10:02 GMT   |   Update On 2018-06-07 10:02 GMT
ஒட்டன்சத்திரத்தில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள மூலச்சத்திரத்தை சேர்ந்த ராணி (வயது 14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தனது பாட்டிக்கு சாப்பாடு கொடுப்பதற்காக சென்றார்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவர் சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்றார். பின்னர் ஆசை வார்த்தை கூறி அவரை கற்பழிக்க முயன்றார்.

உடனே அந்த சிறுமி அவரை தள்ளி விட்டு ஓடி விட்டார். இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Tags:    

Similar News