செய்திகள் (Tamil News)

தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்

Published On 2018-06-07 10:24 GMT   |   Update On 2018-06-07 10:24 GMT
தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 2 பெண்கள் மாயமானதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:

தேனி மாவட்டம் கூடலூர் பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலன். இவரது மகள் நந்தினி (வயது 17). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

தனது புகாரில் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த தர்மேந்திரன் மகன் சந்தோஷ் என்ற வாலிபர்தான் கடத்திச் சென்றிருக்க கூடும் என தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி அமராவதி பள்ளித் தெருவைச் சேர்ந்தவர் விஜயன் (26). டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மகள் சுஷ்மிதா (21) என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுஷ்மிதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அவரது கணவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News