செய்திகள்

திருமங்கலத்தில் 1 1/2 வயது குழந்தையுடன் இளம்பெண் மாயம்

Published On 2018-06-27 16:46 GMT   |   Update On 2018-06-27 16:46 GMT
திருமங்கலத்தில் 1 1/2 வயது குழந்தையுடன் இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பேரையூர்:

திருமங்கலம் மாயாண்டி நகரைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவருக்கு சுப்புலட்சுமி (வயது 24) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

சம்பவத்தன்று சுப்புலட் சுமி தனது 2-வது மகன் கிஷோருடன் (11/2) வெளியே செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரபாண்டி தனது மனைவி, மகனை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். பலன் இல்லை.

இது குறித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டையைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் அஸ்வினி (19). கல்லூரி மாணவியான இவர் சம்பவத்தன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News