செய்திகள் (Tamil News)

சம்பள உயர்வுகோரி ரேசன் கடை பணியாளர்கள் 9-ந்தேதி வேலை நிறுத்தம்

Published On 2018-07-02 05:43 GMT   |   Update On 2018-07-02 06:17 GMT
சம்பள உயர்வுகோரி ரேசன் கடை பணியாளர்கள் 9-ந்தேதி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார். #Rationshopstrike

கீழ்வேளூர்:

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், நாகையில் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டுறவு துறை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரே‌ஷன் கடைகளுக்கு சரியான எடையிலும், கார்டு எண்ணிக்கைகளின் அடிப்படையிலும் பொருட்கள் வழங்கப்படுவது கிடையாது. இதனால் பொதுமக்களுக்கும், ரே‌ஷன் கடை ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு சரியான எடையில், ரே‌ஷன் கார்டுகளுக்கு ஏற்ப அத்தியாவசிய பொருட்களை கடைகளுக்கு வழங்க வேண்டும்.

ரே‌ஷன் கடை ஊழியர்களுக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பொது வினியோக திட்டத்திற்கு என தமிழக அரசு தனித்துறை உருவாக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9-ந் தேதி (திங்கட்கிழமை) தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் கடையடைப்பு மற்றும் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும். எனவே 9-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து ரே‌ஷன் கடைகளும் மூடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #Rationshopstrike

Tags:    

Similar News