செய்திகள்

மீனவ கிராமங்களை தனி பஞ்சாயத்துக்களாக அறிவிக்க கோரி வழக்கு - அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

Published On 2018-07-13 07:24 GMT   |   Update On 2018-07-13 08:23 GMT
மீனவ கிராமங்களை தனி பஞ்சாயத்துக்களாக அறிவிக்க கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.#Fishermenvillage

சென்னை:

மீனவர்களை தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் வகுப்பில் சேர்த்து அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை தனி தொகுதியாக வரையறை செய்யவும், மீனவ கிராமங்களை தனி கிராம பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என்றும் மண்டல் கமி‌ஷன் கடந்த1980-ம் ஆண்டு பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் மீனவ கிராமங்களை தனி கிராம பஞ்சாயத்தாக அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மீனவர் பாதுகாப்பு சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.

மண்டல் கமி‌ஷன் பரிந்துரைபடி மீனவ கிராமங்களை கிராம பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என கொடுத்த மனு மீது இதுவரை தமிழக அரசு நடவடிக்கை இல்லை என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் அந்த மனுவில், தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் 608 மீனவ கிராமங்கள் உள்ளன. 9.24 லட்சம் மக்கள் தொகை உள்ளது.

கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கும் நிதி மீனவ கிராமங்களுக்கு சென்றடையவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன், தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் வார்டு மறுவரையரை குழு உள்ளிட்டோர் ஆகஸ்டு 17-ந்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். #Fishermenvillage

Tags:    

Similar News