செய்திகள்
கூடலூர் அருகே மாணவியை கடத்திய வாலிபர் கைது
கூடலூர் அருகே மாணவியை கடத்தி சென்றது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். #Kidnapped
கூடலூர்:
கூடலூர் தாலுகா மண்வயல் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த வாலிபர் அந்த மாணவியை கடத்தி சென்றார். இது குறித்து பெற்றோர் கூடலுார் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ். சதீஷ், சியாபுதீன், சிஜூ உள்ளிட்ட போலீசார் மாணவி மற்றும் அவரை கடத்திய வாலிபரை தேடி வந்தனர்.
அப்போது கூடலூர் சளிவயலை சேர்ந்த மணி (வயது 20) என்பவர் மாணவியை கடத்தியது தெரிய வந்தது. இந்த நிலையில் கூடலூர் நகர பகுதியில் மணி நடந்து சென்றதை போலீசார் கண்டனர். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். பின்னர் மாணவியை போலீசார் மீட்டனர். இது குறித்து மணி மீது போலீசாார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.
கூடலூர் தாலுகா மண்வயல் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த வாலிபர் அந்த மாணவியை கடத்தி சென்றார். இது குறித்து பெற்றோர் கூடலுார் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ். சதீஷ், சியாபுதீன், சிஜூ உள்ளிட்ட போலீசார் மாணவி மற்றும் அவரை கடத்திய வாலிபரை தேடி வந்தனர்.
அப்போது கூடலூர் சளிவயலை சேர்ந்த மணி (வயது 20) என்பவர் மாணவியை கடத்தியது தெரிய வந்தது. இந்த நிலையில் கூடலூர் நகர பகுதியில் மணி நடந்து சென்றதை போலீசார் கண்டனர். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். பின்னர் மாணவியை போலீசார் மீட்டனர். இது குறித்து மணி மீது போலீசாார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.