செய்திகள் (Tamil News)

மகள் தீக்குளித்து இறந்ததால் சீர்வரிசை பொருட்களை திருப்பிகேட்ட மாமனார் மீது தாக்குதல்

Published On 2018-07-27 10:28 GMT   |   Update On 2018-07-27 10:28 GMT
குடவாசல் அருகே மகள் தீக்குளித்து இறந்ததால் சீர்வரிசை பொருட்களை திருப்பி கேட்ட மாமனார், மாமியாரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குடவாசல்:

திருவாரூர் மாவட்டம் குடவாசலை அடுத்து கண்டர மாணிக்கத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 32) விவசாயி. இவருக்கும் பிரேமா என்ற பெண்ணும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த பிரேமா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து பிரபு 2-வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த பிரேமாவின் தந்தை சந்திரன், தாய் அமுதா ஆகியோர் கண்டரமாணிக்கம் சென்று தங்களது மகளுக்கு திருமணத்தின் போது கொடுத்த சீர்வரிசை பொருட்களை திருப்பி தரும்படி கேட்டு உள்ளனர். அப்பேது பிரபு அவர்களுடன் தகராறு செய்து இருவரையும் தாக்கி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி சந்திரன் குடவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தார். #tamilnews
Tags:    

Similar News