செய்திகள் (Tamil News)

போடியில் மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை

Published On 2018-08-18 08:51 GMT   |   Update On 2018-08-18 08:51 GMT
போடியில் மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:

போடி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 28). இவருக்கும் பி.சி.பட்டியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சதீஸ்குமார் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் தினமும் மது குடித்து விட்டு வந்துமனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். நாளுக்கு நாள் பிரச்சினை அதிகரித்ததால் அவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது முதல் சதீஸ்குமார் மன உளைச்சலில் இருந்து வந்தார். தனது குடி பழக்கம்தான் மனைவி இறக்க காரணம் என நினைத்தார். எனவே தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி தென்னை மரத்துக்கு வைக்கும் மாத்திரையை தின்று விட்டு மயங்கி கிடந்தார்.

அக்கம் பக்கத்தினர் மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு சதீஸ்குமாரை அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News