செய்திகள் (Tamil News)

பழனியில் பேன்சி கடையில் புகுந்து ரூ.1½ லட்சம் கொள்ளை

Published On 2018-08-24 09:10 GMT   |   Update On 2018-08-24 09:10 GMT
பழனியில் பேன்சி கடையில் புகுந்து ரூ.1½ லட்சம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பழனி:

பழனி அடிவாரம் பூங்கா சாலையைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 55). அதே பகுதியில் பேன்சி கடை வைத்துள்ளார். நேற்று வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச் சென்றார். ரூ.1½ லட்சம் பணத்தை இரவு நேரம் என்பதால் கடையிலேயே வைத்து விட்டு சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மேற்கூரை வழியாக கடைக்குள் புகுந்தனர். அங்கு இருந்த ரூ.1½ லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து புகாரின் பேரில் அடிவாரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மருந்து கடையில் கொள்ளை போனது. மேலும் நடந்து சென்ற பெண்களிடமும் நகை பறிக்கப்பட்டது.

இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் கொள்ளையர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் வெளியே நடமாடவே அச்சமடைந்து வருகின்றனர். எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News