செய்திகள் (Tamil News)

பாசனத்துக்கு தண்ணீர் விடக் கோரி பா.ம.க. 4-ந்தேதி ஆர்ப்பாட்டம்

Published On 2018-08-28 09:11 GMT   |   Update On 2018-08-28 09:11 GMT
கடைமடை வரை அனைத்து வாய்க்கால்களிலும் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி பா.ம.க. கட்சி சார்பில் வருகிற 4-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி 170 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கும் நிலையில் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. எனவே கடைமடைவரை அனைத்து வாய்க்கால்களிலும் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி பா.ம.க. கட்சி சார்பில் வருகிற 4-ந்தேதி காலை 10 மணி அளவில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News