செய்திகள்
தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்- திருமாவளவன்
தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்று நெய்வேலியில் விடுதலை சிறுத்தைகட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார். #VCK #Thirumavalavan
நெய்வேலி:
நெய்வேலி புதுநகர் 27-வது வட்டம் என்.எல்.சி. திருமண மண்டபத்தில் நெய்வேலி சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தை கட்சியின் துணை செயலாளர் ராஜாமணி- கனிமொழி திருமணம் இன்றுகாலை நடைபெற்றது.
கேள்வி: ரஜினிகாந்த் ஜாதி ரீதியாகவும், தனி அமைப்பு ரீதியாகவும் உள்ளவர்களுக்கு எனது கட்சியில் இடம் இல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து தங்கள் கருத்து என்ன?
பதில்: அமைப்பு ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் இல்லாத ஜனநாயக அரசியலை முழுமையாக வரவேற்கிறேன். இதை ரஜினிகாந்த் இறுதியாக செயல்படுத்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
கேள்வி: நடிகர் விஷால் புதிய அமைப்பு தொடங்கியது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பலரும் நினைத்துக் கொண்டு உள்ளனர். தன்னால்தான் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும் என ஒவ்வொருவரும் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இதன் முடிவு மக்கள் கையில்தான் உள்ளது. தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #VCK #Thirumavalavan
நெய்வேலி புதுநகர் 27-வது வட்டம் என்.எல்.சி. திருமண மண்டபத்தில் நெய்வேலி சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தை கட்சியின் துணை செயலாளர் ராஜாமணி- கனிமொழி திருமணம் இன்றுகாலை நடைபெற்றது.
இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-
பதில்: அமைப்பு ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் இல்லாத ஜனநாயக அரசியலை முழுமையாக வரவேற்கிறேன். இதை ரஜினிகாந்த் இறுதியாக செயல்படுத்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
கேள்வி: நடிகர் விஷால் புதிய அமைப்பு தொடங்கியது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பலரும் நினைத்துக் கொண்டு உள்ளனர். தன்னால்தான் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும் என ஒவ்வொருவரும் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இதன் முடிவு மக்கள் கையில்தான் உள்ளது. தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #VCK #Thirumavalavan