செய்திகள்

திருமங்கலத்தில் அரசு பஸ் மீது கல்வீச்சு - வாலிபரிடம் விசாரணை

Published On 2018-10-05 10:25 GMT   |   Update On 2018-10-05 10:25 GMT
திருமங்கலத்தில் அரசு பஸ் மீது கல் வீசிய நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரையூர்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படையில் இருந்து நேற்று இரவு அரசு பஸ் பயணிகளுடன் திருமங்கலத்திற்கு புறப்பட்டது.

சீனிராஜ் (வயது 44) என்பவர் டிரைவராகவும், ஆதிமூலம் என்பவர் கண்டக்டராகவும் பணியில் இருந்தனர்.

திருமங்கலம் தெற்குத் தெரு விநாயகர் கோவில் அருகே அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது மஞ்சள் பனியன் அணிந்திருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று பஸ்சின் பின்புறம் கற்களை வீசிவிட்டு தப்பினார். இதில் கண்ணாடிகள் உடைந்தன.

இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தெற்கு தெருவைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News