செய்திகள்

திருமங்கலத்தில் முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த வாலிபர்

Published On 2018-10-06 12:14 GMT   |   Update On 2018-10-06 12:14 GMT
முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்ததாக வாலிபர் மீது புகார் செய்யப்பட்டுள்ளதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டை கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 28). கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர். இவரது மனைவி அமரஜோதி (26).

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த இவர், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் முருகனுக்கு இந்துமதி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். அதனை மறைத்து என்னை 2-வது திருமணம் செய்துள்ளார். எனது நகைகளை பறித்து விற்பனை செய்து விட்டதோடு அதனை கேட்டால் அடித்துக்கொடு மைப்படுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதற்கிடையில் சப்-இன்ஸ்பெக்டர் தன்னை தாக்கியதாக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் முருகன் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் சுமதி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Tags:    

Similar News