செய்திகள்

பென்னாகரம் அருகே பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை

Published On 2018-11-02 13:27 GMT   |   Update On 2018-11-02 13:27 GMT
பென்னாகரம் அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முதியவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள பெரும்பாலை பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது75). இவர் தனது மகன் நாகராஜ் வீட்டில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக மாணிக்கத்துக்கு உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் பூச்சி மருந்து குடித்தார்.

இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற மாணிக்கம் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து பெரும்பாலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News