செய்திகள் (Tamil News)

கூடலூர் அருகே செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது

Published On 2018-12-29 10:59 GMT   |   Update On 2018-12-29 10:59 GMT
கூடலூர் அருகே செல்போன் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தேனி:

கம்பம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அருகே வசித்து வருபவர் கர்ணன் (வயது 53). இவர் சம்பவத்தன்று கூடலூரில் இருந்து கம்பத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென பைக் பழுதானது. இதனால் அதனை நிறுத்தி சரி செய்து கொண்டு இருந்தார். தனது செல்போனை பைக் மீது வைத்து விட்டு ரிப்பேர் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியே வந்த 2 வாலிபர்கள் செல்போனை திருடிக்கொண்டு ஓட முயன்றனர்.

கர்ணன் சத்தம் போட்டு அங்கிருந்தவர்கள் உதவியுடன் அவர்களை விரட்டி பிடித்தார். பின்னர் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் விசாரணையில் அவர்கள் கே.கே.பட்டி கருமாரிபுரத்தைச் சேர்ந்த பால்பாண்டி (26), கார்த்திக் (24) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News