செய்திகள்

வியாபாரியிடம் வழிப்பறி-கொள்ளையனுக்கு 10 ஆண்டு ஜெயில்

Published On 2019-01-09 10:12 GMT   |   Update On 2019-01-09 10:12 GMT
ராயபுரத்தில் வியாபாரியிடம் வழிப்பறி செய்த கொள்ளையனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

ராயபுரம்:

பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் வியாபாரி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு ராயபுரம் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது வண்ணாரப்பேட்டை சிமெண்ட் ரோடு பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர் வியாபாரி பால முருகனை கத்தியால் குத்து 2 பவுன் நகையை பறித்து தப்பினார்.

இதுகுறித்து ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஜார்ஜ் டவுன் 19-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து நீதிபதி சத்யா தீர்ப்பு அளித்தார். அதில் குற்றவாளி சுகுமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5 ஆயிரத்து 500 அபராத மும் விதித்தார்.

Tags:    

Similar News