செய்திகள்

அறந்தாங்கி அருகே விபத்தில் வாலிபர் பலி

Published On 2019-01-25 12:45 GMT   |   Update On 2019-01-25 12:45 GMT
அறந்தாங்கி அருகே பைக் விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அறந்தாங்கி:

அறந்தாங்கி அருகே உள்ள ஏகணிவயலை சேர்ந்தவர்கள் சார்லஸ் (வயது 32), மார்கோணி (45). இருவரும் பைக்கில் மணமேல்குடி பகுதியில் உள்ள ஏகப்பெருமாளுரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பைக் விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சார்லஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மார்கோணி படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச் சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து மணமேல்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News