செய்திகள்
தஞ்சையில் வீட்டு புரோக்கர் தூக்குப்போட்டு தற்கொலை
தஞ்சையில் உடல் நிலை சரியில்லாமல் இருந்த வீட்டு புரோக்கர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மேலவீதி நாயக்கன் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 55). இவர் வீட்டு புரோக்கராக இருந்து வந்தார். கடந்த சில மாதங்களாக ராமச்சந்திரனுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார்.
நேற்று மாலை பக்கத்து வீட்டின் மாடி அறைக்கு சென்றார். அங்கு கேபிள் வயரால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தஞ்சை மேற்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராமசந்திரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுப்பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.