செய்திகள்

சூலூர் அருகே விபத்து - எலக்ட்ரீசியன் உள்பட 2 பேர் பலி

Published On 2019-01-28 11:07 GMT   |   Update On 2019-01-28 11:07 GMT
சூலூர் அருகே விபத்தில் எலக்ட்ரீசியன் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூர்:

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள வெங்கிட்டாபுரத்தை சேர்ந்தவர் ராஜன் (50). எலக்ட்ரீசியன். இவரது நண்பர் மூர்த்தி (40). நீலாம்பூரை சேர்ந்தவர்.

இவர்கள் இருவரும் நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். சூலூர் அருகே உள்ள கரியாம் பாளையம் பிரிவில் சென்ற போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் ராஜன் சம்பவ இடத்திலே பலியானார். பலத்த காயம் அடைந்த மூர்த்தி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்று விட்டது. சூலூர் போலீசார் விசாரணை நடத்தி காரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News