செய்திகள்

கோவையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்

Published On 2019-02-20 10:14 GMT   |   Update On 2019-02-20 10:14 GMT
கோவையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயமான சம்பவத்தையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

தொண்டாமுத்தூர் அருகே உள்ள போளுவாம் பட்டியை சேர்ந்த சவுந்தர் ராஜன் என்பவரது மகள் கல்பனா என்ற சவுடேஸ்வரி(21). பி.சி.ஏ. பட்டதாரி. இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து நிச்சயித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 14-ந் தேதி மணியகாரம்பாளையத்தில் உள்ள உறவினரை பார்க்க சென்ற கல்பனா அதன்பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கல்பனா கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்பனாவை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

குனியமுத்தூர் திருமூர்த்தி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் யமுனா தேவி (22) ஆவாரம்பாளையத்தில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற யமுனா தேவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

புகாரின்பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து யமுனா தேவியை தேடி வருகின்றனர்.

கோவை கோல்டுவின்ஸ் பகுதியை சேர்ந்தவர் மரிய அந்தோணி. இவரது மனைவி சங்கமேஸ்வரி என்ற சாந்தி(வயது 35).

இவர்களது மகள் மகேஷ்வரி(9). சம்பவத்தன்று மரிய அந்தோணி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த சாந்தி, மகேஷ்வரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் இருவரும் கிடைக்க வில்லை. இதுகுறித்து மரிய அந் தோணி பீளமேடு போலீ சில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சாந்தி, மகேஷ்வரி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News