செய்திகள்

பர்கூர் அருகே கார் கவிழ்ந்து 4 பேர் காயம்

Published On 2019-03-11 13:40 GMT   |   Update On 2019-03-11 13:41 GMT
பர்கூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி கார் ஒன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணம் செய்தனர். காரானது பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி அருகில் வந்த போது திடீரென்று டயர் பஞ்சர் ஆனது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் தடுப்பு சுவரை உடைத்து மறு சாலைக்கு (கிருஷ்ணகிரி - சென்னை) சென்று கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News