செய்திகள்

விபரீதத்தில் முடிந்த பேஸ்புக் காதல்- கல்லூரி மாணவியை காரில் கடத்தி கற்பழித்த காதலன்

Published On 2019-04-23 11:12 GMT   |   Update On 2019-04-23 11:12 GMT
நாகர்கோவில் கல்லூரி மாணவியை காரில் கடத்தி சென்று கற்பழித்து தனது நண்பருக்கும் விருந்தாக்கிய காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

அந்த மாணவி பேஸ்புக்கில் தனது தோழிகளுடன் தொடர்பில் உள்ளதால் அதன் மூலம் அவருக்கு பலரும் பழக்கமானார்கள். அவரும் அனைவரிடமும் பேஸ்புக்கில் தனது கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

அப்போது அஞ்சுகிராமம் அருகே உள்ள ஆவரைகுளம் பகுதியை சேர்ந்த ஏசுநேசன் என்ற வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. கை ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான அந்த வாலிபர் முதலில் நாகர்கோவில் மாணவியிடம் நட்பு முறையில் கருத்துக்களை பரிமாறி வந்தார். பிறகு நாட்கள் செல்லச் செல்ல அந்த மாணவியை தான் காதலிப்பதாக கூறினார்.

முதலில் அவரது காதலை ஏற்க தயங்கிய மாணவி அந்த வாலிபரின் தொடர் வற்புறுத்தல் காரணமாக அவரது காதலை ஏற்றுக் கொண்டார்.

அதன்பிறகு அவர்கள் இருவரும் தங்களது புகைப்படங்களை பரிமாற்றிக் கொண்டனர். செல்போன் மூலம் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். கடந்த சில மாதங்களாக அவர்களது காதல் தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில் அந்த வாலிபர், மாணவியிடம் அவரை நேரில் சந்தித்து பேச விரும்புவதாக கூறினார். அந்த மாணவியும் அதற்கு சம்மதம் தெரிவித்ததால் ஏசுநேசன் தனது காரில் வெள்ளமடம் பகுதிக்கு வந்தார். பிறகு செல்போன் மூலம் அந்த மாணவிக்கு தகவல் கொடுத்து வெள்ள மடத்திற்கு வரவழைத்தார். மாணவி அங்கு வந்ததும் அவரை தனது காரில் ஏற்றிக் கொண்டு ஆவரைகுளம் நோக்கி புறப்பட்டார்.

அந்த காரில் ஏசுநேசனுடன் வாலிபர் ஒருவரும் இருந்ததால் சந்தேகம் அடைந்த மாணவி அந்த வாலிபர் பற்றி ஏசுநேசனிடம் கேட்டார். அதற்கு அவர் தனது நண்பர் ஆதிஸ் என்றும் தனக்கு துணையாக வந்துள்ளதாகவும் கூறி மாணவியை சமாதானப்படுத்தினார்.

பிறகு அந்த மாணவியை காரில் அழைத்துக் கொண்டு ஆவரைகுளத்திற்கு ஏசு நேசன் சென்றார். அங்கு வைத்து அந்த மாணவியை ஏசுநேசன் ஆசை வார்த்தை கூறி கற்பழித்தார். மேலும் தனது நண்பர் ஆதிசுக்கும் அந்த மாணவியை விருந்தாக்கினார். தனது காரில் அந்த மாணவியை ஏற்றிக் கொண்டு மீண்டும் அவரது ஊரில் கொண்டு சென்று விட்டுவிட்டு ஏசுநேசன் சென்றுவிட்டார்.

பாதிக்கப்பட்ட அந்த மாணவி நடந்த விவரங்களை தனது வீட்டாரிடம் கூறி அழுதார். பிறகு தனக்கு நடந்த கொடுமை பற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு ஏசுநேசன், ஆதீஸ் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News