செய்திகள் (Tamil News)

பல்லாவரம் அருகே பாம்பு கடித்து மாணவர் மரணம்

Published On 2019-05-22 09:03 GMT   |   Update On 2019-05-22 09:03 GMT
பல்லாவரம் அருகே பாம்பு கடித்து மாணவர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம்:

பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் பெரியார் நகரை சேர்ந்தவர் சண்முகையா, இவர் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சதீஷ்குமார் என்கிற செந்தில் குமார் (17), ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு தனது தந்தையுடன் திரிசூலம் ரெயில் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது ரோட்டோரம் சென்று கொண்டிருந்த பாம்பு சதீஷ் குமாரை கடித்தது. உடனே அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News