செய்திகள்
பாபநாசம் அருகே ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி
பாபநாசம் அருகே ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலியானார். இதையடுத்து அவரது உடல் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் அருகே பண்டார வாடை லெட்சுமிபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் விஜயலட்சுமி (வயது 60). இவர் பண்டாரவாடை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது அந்த வழியாக சென்ற விரைவு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்து அவருடைய மகள் ராஜகுமாரி (34) கொடுத்த புகாரின் பேரில் தஞ்சாவூர் ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டு சுரேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியின் பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாபநாசம் அருகே பண்டார வாடை லெட்சுமிபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் விஜயலட்சுமி (வயது 60). இவர் பண்டாரவாடை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது அந்த வழியாக சென்ற விரைவு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்து அவருடைய மகள் ராஜகுமாரி (34) கொடுத்த புகாரின் பேரில் தஞ்சாவூர் ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டு சுரேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியின் பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.