செய்திகள்
விபத்து

ராமநாதபுரம் அருகே பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் பலி

Published On 2021-11-05 05:27 GMT   |   Update On 2021-11-05 05:27 GMT
ராமநாதபுரம் அருகே பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் கேணிக்கரையில் ஸ்டூடியோ நடத்தி வந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது37). இவரது நண்பர் குயவன்குடியை சேர்ந்த பிரகாஷ் (41). இவர் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார்.

நேற்று மதியம் இவர்கள் 2 பேரும் காரிக்கூட்டம் சென்று விட்டு மாலை குயவன்குடி செல்வதற்காக ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையை கடந்தனர்.

அப்போது ராமேசுவரத்தில் இருந்து குமுளி சென்ற அரசு பஸ் ராஜேஷ் கண்ணன், பிரகாஷ் மீது மோதியது. இதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இது குறித்து கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News