உடன்குடி பேரூராட்சி சார்பில் 250 மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு முகாம்
- அன்சாரி நகர், கோட்டைவிளை பகுதியிலும் புதுமனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார்250 மரக்கன்றுகள் நடப்பட்டது.
- சுய உதவி குழுக்கள் பொதுமக்களுக்கு தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கொள்கைகளை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவின்ப டியும் நெல்லை மண்டல பேரூராட்சி களின் உதவி இயக்குனர் வழிகாட்டுதல் படியும் உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் நடவடிக்கையாக டி.டி.டி.ஏ. மேல்நிலை பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், பேரூராட்சி தலைவர், மன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பெண்கள் சுய உதவி குழு உறுப்பினர்கள் இணைந்து தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி புதுமனை அன்சாரி நகர் வரை பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தொடர்ந்து அன்சாரி நகர், கோட்டைவிளை பகுதியிலும் புதுமனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார்250 மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டது.
புதுமனை வடக்கு தெரு மற்றும் மேலத்தெரு பகுதியில் பொது மக்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் திட கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. அதனைத் தொடர்ந்து சுய உதவி குழுக்கள் இணைந்து சுல்தான்புரம் பகுதியில் பொதுமக்களுக்கு மக்கும் குப்பை , மக்காத குப்பை மற்றும் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கொள்கைகளை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி, செயல் அலுவலர் பாபு, டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி, ஆசிரியர் டேனியல், கவுன்சிலர்கள் கம்மது ஆபித், சபானா தமீம், அன்புராணி, மும்தாஜ்சலீம், ராஜி , சிவா மற்றும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.