உள்ளூர் செய்திகள் (District)
பண்ருட்டி அருகே விபத்தில் காயமடைந்த விவசாயி பலி
- ஆரோக்கியதாஸ் (வயது 56). விவசாயி. இவர் கடந்த 9-ந்தேதி வெளி யூருக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கி ளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
- வீட்டின் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த இருளங்குப்பத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 56). விவசாயி. இவர் கடந்த 9-ந்தேதி வெளி யூருக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கி ளில வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
அப்போது வீட்டின் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் இவரை மீண்டும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மரில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செயது விசாரித்து வருகின்றனர்.