உள்ளூர் செய்திகள்

தனியார் பஸ் நடத்துனரை தாக்கிய 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

Published On 2023-01-05 09:30 GMT   |   Update On 2023-01-05 09:30 GMT
  • கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
  • 6 பேர் கொண்ட கும்பல், பஸ்சின் நடத்துனரான ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை நடுவீதி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 30) என்பவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

சேலம்:

கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. சேலம் அம்மாபேட்டை டி.எம்.எஸ் பஸ் நிறுத்தம் அருகே நின்றபோது, 6 பேர் கொண்ட கும்பல், பஸ்சின் நடத்துனரான ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை நடுவீதி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 30) என்பவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், பஸ்சில் வந்த பயணி ஒருவரை ஆத்தூர் அருகே நடத்துனர் பாலசுப்பிரமணி இருக்கை மாறி அமரச் சொல்லி உள்ளதார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த பயணி, தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரச் சொல்லி இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து பாலசுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய 6 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News